*ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் ஒருவரின் அனுபவ வரிகள். படிக்கும் போதே நாம் எப்போது ஓய்வு பெறுவோம் என்கிற எண்ணம் கண்டிப்பாக வரும் படியுங்கள்*
இன்று செப்டம்பர் 30.
எல்லோருக்கும் மறக்க முடியாத நாட்கள் நிறையவே இருக்கும்.
அதில் மகிழ்ச்சியான நாட்கள் எப்போதும் மனதில் நிற்கும்.
அது முதன் முதலில் காதலை சொன்ன நாட்களாக இருக்கலாம்.
தன் காதலியின் இல்லை மனைவியின் பிறந்த நாளோ இல்லை தங்களின் குழந்தைகளின் பிறந்தநாளாக இருக்கலாம்
எனக்கு இதையெல்லாம் தாண்டி எனக்கு இதில் முதல் இடம் பிடிப்பது தான் செப்டம்பர் 30.
சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு
எனக்கு பரிபூரண விடுதலை கிடைத்த நாள் அது.
அதுவரை நான் என்ன பேச வேண்டும்,
யாரிடமும் பேச வேண்டும், எப்போது வரவேண்டும்,,
யார் உள்ளே வந்தாலும் நானே அவர்களிடம் வலிய சென்று வணக்கம் போட்டு பேச வேண்டும். வந்தவர் பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லை என்றாலும் அவர் பேசுவதை பொறுமையாக கவனிக்க வேண்டும்.
அவர் உயர்ந்த பொறுப்பில் இருக்கிறார் என்பதற்காக, நான் எப்போதும் பேசுவது போல் அவர்களிடம் நான் இயல்பாக பேச முடியாது, பேச ஆரம்பிக்கும் போதே எனது பேச்சில் பணிவினை காட்ட வேண்டும்.
அங்கே சும்மா இருந்தால் கூட அவசரத்திற்கு வீட்டுக்கு வர வேண்டும் என்றால் அந்த தகவலை மேலே வரை சொல்லி அனுமதி வாங்க வேண்டும்.
கிட்டத்தட்ட ஏசி உள்ள சிறைச்சாலை போன்று தான் நான் அங்கு சிறைப்பட்டு இருந்தேன்.
செப்டம்பர் 30 அன்று தான் இந்த கிளி தன் தங்க கூட்டை விட்டு தன் சுற்றத்தோடு வானில் சுதந்திரமாக பயணத்தை தொடங்கிய நாள்.
ஆமாங்க, இந்த செப்டம்பர் 30, 2021 லில் தான் நான் பணியில் இருந்து ஓய்வு பெற்ற நாள்.
அதுவரை அடுத்தவர்களின் தங்க முட்டைகளுக்கு , கோடிக் கணக்கான பணத்திற்கு அடை காத்த பொறுப்பில் இருந்து விடை பெற்று,
நான் என் சொந்த கூட்டுக்கு வந்தேன் நான் அங்கு அடை காக்க இல்லை நான் அடைக்கலமாக எனது குடும்பத்திடம்.
வேலை பார்க்கும் போது கோடிக்கணக்கான பணத்தை நான் பார்த்த போது வராத சந்தோஷம் இப்போ இந்த நான்கு ஆண்டுகளாக என் சட்டைப் பையில் இருந்த சில நாணயங்களை எண்ணும் போது கிடைத்தது.
அந்த கோடி ரூபாய் என்பது ஊருக்கு நிஜம் என்றாலும் அது எனக்கு மாயை.
இந்த சில நூறு ரூபாய் நோட்டுகளே எனக்கு நிஜம் என்பதை இப்போ உணர்கிறேன்.
அந்த அதிகாரம், சுற்றி இருக்கும் ரூபாய் நோட்டு கட்டுகள் எல்லாம் கடல் தண்ணீர் போல என்னதான் பெரியதாக இருந்தாலும் நான் என் தாகத்திற்கு சில சொட்டுகள் கூட குடிக்க முடியாது. எனக்காக செலவு செய்ய ஆரம்பித்திருக்கிறேன்.
இப்போதுதான் அது தொகை குறைவு என்றாலும் கடல் அளவு மகிழ்ச்சி அடைகிறேன்.
விடுமுறை நாட்கள் மட்டுமே நான் வெளியூருக்கு போக பழகிய நான் அதாவது பெயிலில் ஊருக்கு சென்று வருவது போல் வந்தவன் இப்போ நினைத்த நேரத்தில் ஊருக்கு போக
உறவினரோடு பேசவும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
நாளுக்கொரு புது சட்டை போடும் பழக்கத்திலிருந்தும்
தினமும் முகச்சவரம் செய்யும்
வேலையிலுமிருந்தும் ஒதுங்கிவிட்டேன்.
ஆமாம், நான் யாருக்காக வெளி வேஷம் போட வேண்டும். தேவைப்பட்டால் இப்போ என்னை அலங்காரம் செய்து கொள்கிறேன், ஜீன்ஸ் பேன்ட், டி சர்ட் கூட போட்டுக் கொள்கிறேன். மற்ற நேரங்களில் வெறும் கைலியில் என்னை
முடக்கிக் கொள்கிறேன்.
பெருமைக்காக பெரிய மாலுக்கு போவது இல்லை. பெட்டிக் கடையிலோ இல்லை அண்ணாச்சி கடையிலோ என் தேவை பூர்த்தி ஆகிறது.
சாப்பிட்டதும் ஹோட்டலில் டிப்ஸ் கொடுப்பதை
நிறுத்தி விட்டேன் - வீதியில் கை நீட்டுபவனுக்கு
சில்லறையாவது கொடுக்கிறேன்.
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஆயிரம் ரூபாய்க்கு மேல் சூ வாங்கிய நான் இப்போது போட்டு இருக்கும் செருப்பு வெறும் இருநூறு ரூபாய் என்றாலும் இன்னும் தேயாமல் இருக்கிறது நான்கு வருடங்கள் ஆகியும்.
காலில் சூ போட்டுக்கொண்டு நான் நடந்து போனதை விட இப்போது இந்த தேய்ந்த செருப்பில் நான் நடப்பதை பெருமையாக உணர்கிறேன்.
இந்த சமூகம் என் வெளித் தோற்றத்திற்கு தான் மதிப்பு தரும் என்று நான் இருந்து,
இப்போ தான் உண்மையினை
உணர்ந்தேன், நான் யார் என்று.
இப்போது எப்போதெல்லாம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் கோவிலுக்கு செல்கின்றேன்,
எந்த வேண்டுதலும் இல்லாமல்,
அதனாலேயே
கேட்காமலே கிடைக்கின்றது.
ஆமாம் நினைத்த நேரத்தில், விரும்பிய ஊருக்கு கோவிலுக்கு செல்கிறேன், நிஜமாகவே சாமி கும்பிடும் போதே நிம்மதி அடைகிறேன், பணியில் இருக்கும் போது ஒரு நாள் லீவு வேண்டும் என்றால் கூட ஒரு வாரம் முன்பே அனுமதி பெற வேண்டுமே
இப்போதெல்லாம்
காரை நானே ஓட்டுகின்றேன். அப்போ பேச்சு துணைக்கு கூடவே என் மனைவி. போகும் போது என் மனைவி இன்னும் கொஞ்ச தூரத்தில் அந்த கோவில் வரும், இந்த தோப்பு வரும் என்பாள்.
எத்தனையோ முறை அதை கடந்து நான் சென்று இருந்தாலும், இப்போதுதான் முதல் முறை பார்ப்பது போல் பார்க்கிறேன் இப்போ மனதில் வேறு அலுவலக நினைவுகள் இல்லை என்பதால்.
நேரத்துக்கு தூங்குகிறேன் - எந்த தூக்க மாத்திரையும் சாப்பிடாமல். தொலைபேசியை அலாரத்துக்காகவும் பயன்படுத்துகிறேன்.
முன்பு செல்லில் பேசும் போது, யார் பேசுவது என்ற பயந்திலே போனை எடுத்தவுடன் இப்போது சுதந்திரமாக போனில் பேசுகிறேன், எந்த என் உயர் அதிகாரியும் இப்போ என்னோட பேச வாய்ப்பு இல்லை என்பதால்.
முன்பு கேட்ட இளையராஜா பாடல்கள் இப்போது இருமடங்கு மகிழ்ச்சி தருகிறது,
ஆமாம் இப்போ நான் யார் பேசுவதையும் கேட்க தேவையில்லை என்பதால்.
இனி என் கையில்
மீதம் இருக்கின்ற ஒவ்வொரு ரூபாய்யும்
ஒரு லட்சம் மதிப்பாக உணர்கின்றேன்.
இனி ஒவ்வோரு என் விடியலும்
இறைவன் எனக்கு தந்ந போனஸ் தான்
இன்றோடு நான்கு ஆண்டுகள் ஆகிறது நான் எனக்காக வாழ்க்கையில் வாழத் தொடங்கி ஆனால் நாற்பது ஆண்டுகள் எனக்காக வாழ்ந்த மகிழ்சியை உணர்கிறேன்.
எப்போ பயணம் முடியும் என்று தெரியாது அதுவரை அந்த நொடி வரை மகிழ்ச்சியாக இருப்பேன் என்பது மட்டும் நிச்சயம் ஏன் என்றால் எனது மனதில் எந்த அழுத்தமும் இல்லை என்பதால்.
சுருக்கமாக சொன்னால் எனக்கு வயது 64 முடிந்தாலும்,
இப்போ வெறும் 4 வயது குழந்தை மனதோடு நான் வாழ ஆரம்பித்து இருக்கிறேன்.
இதுவரை வீட்டில் முன் வாசலில்
நந்தியாவட்டையிருப்பதே நான் கவனித்ததே இல்லை, இப்போ தினமும் ஆனந்தத்துடன் அந்த பூக்களைப் பறித்து
அதை அழகாக நூலில் கட்ட பழகுகிறேன்.
மனைவி மூட்டு வலியால் விந்துவதை
இப்போதுதான் கவனிக்கின்றேன்,
வாலினியும், மகாராஜா தைலம் இப்போ ஒவ்வொ௫ மாதமும் தி௫ப்பதி மெடிக்கலில்
மற்ற ம௫ந்துகளோடு வாங்கப்படுகின்றது.
மொட்டை மாடியை சுத்தம் செய்கின்றேன்,
இதுவரை பறவைகளுக்கு உணவு, தண்ணீர் வைத்துவிட்டு, அந்த பறவையினை விட வேகமாக வங்கிக்கு பறந்தவன்,
இப்போ ஓரமா நின்னு,
காக்கை வந்ததா, கு௫வி வந்ததா, அந்த அணில் வந்ததா என ஆவலோடு பார்த்து நிற்க்கின்றேன், அது சாப்பிட்ட பின்புதான்
கீழே இறங்குகின்றேன்.
தினமும் அந்த காக்கா அதான் தன் கால் விரல்களை இழந்த காக்கா வந்து சாப்பிடும் வரை நான் காக்காவிற்கு காவல் இருக்கிறேன்.
நானே போய் பேப்பர் வாங்குகின்றேன், பால் பாக்கெட் வாங்கும் போது.
ஒ௫ நாள் தினத்தந்தி,மறு நாள் தினமனி.
பேப்பர் கடை அ௫கில் இ௫க்கும்
ரோட்டு ஓர தள்ளுவண்டி கடையி்ல்
தினமும் ஐந்து ப௫ப்பு வடை வாங்குகின்றேன்
சுவையோ,அந்த சரவணபவனை மிஞ்சுகின்றது.
அவசர பொட்டுக்கடலை கருவேப்பிலைகூட நானே வாங்க ஓடுகின்றேன், இளம் வயது பையன் போல, அப்போ கையில் டயர் ஓட்டிக்கொண்டே சென்றேன், இப்போ நிஜ ஸ்கூட்டி வண்டியிலே.
தேங்காய்களை நானே உடைத்து,
அதன் தண்ணீரை சிந்தாமல் டம்பளரில் பிடித்து ஒரே மடக்கில் குடிக்காமல்,
நான்கு ஐந்து முறை வாயில் ஊற்றிக்கொள்கின்றேன்.
மாதத்தில் முதல் வாரமே ரேஷன் கடைக்கு போகிறேன். அங்கே கோதுமை போடவில்லை என்றா்ல்,
கோதுமை அடுத்த வாரம் வ௫மா என கேட்கிறேன்.
கோதுமையும், பச்சரிசையும் அந்த வாரமே
பல்லக்கு ரோட்டில் உள்ள ரைஸ்மில்லில் அரைத்து வ௫கின்றேன்.
இது வரை ரைஸ்மில் சத்தம் இரைச்சலாக தெரிந்தது,
இப்போ ஒ௫ புதிய ஸ்வரமாக, அதுவும் ரைஸ்மில் ஓட ஆரம்பித்தவுடன் வ௫ம் சத்தம்
உய்...உய்.. கேட்க அங்கயே நிற்கின்றேன்.
தினந்தோறும்,
கடமையாக காலை ஆறு மணிக்கு கோவிலுக்கு போய் , உடல் அங்கே இ௫ந்தாலும், மனசு மட்டும் நேற்று வந்தாரே அந்த ஸ்டேட் பேங்கு ரிடையர்டு மேனேஜர் சொன்னது போல் பணம் போட வ௫வாரா,
முதல் வேலையாக பேங்கு போனவுடன் அவருக்கு போண் பன்னனும் என மனதி்ல் முடிவு எடுபேன்.
இப்போ , கோவிலில்
செண்பகவல்லி அம்மன் எந்த கலரில் பட்டுப்புடவை கட்டி இ௫ப்பார் என பார்க்க தூண்டுகின்றது,
அதுவும் நிதானமாக பத்து மணி்க்கு கோவிலுக்கு போகும்போது.
நேற்று வரை ஹிட்லராயிருந்தவர் இப்போ
சார்லி சாப்ளின் மாதிரி.
இப்போவெல்லாம் ஓடைப்பட்டி வினாயாகர் கோவிலிக்குபோகும் போது,
சாமிக்கு பூக்கள் வாங்கும் போது
அந்த மல்லிகை பூவில் ஒ௫ ஓராமாக வெட்டி வாங்குகின்றேன்,
என் மனைவிக்கு.
அதோடு இப்போ தான் என் மனைவியின் காதில் எந்த கம்மல் போட்டு இருக்கிறார் என்பதை கவனிக்கிறேன், இப்போது தான் என் மனைவியின் கம்மல் அழகாக இருப்பதை இப்போ உணர்கிறேன் ஏன் என்றால் வேலையில் இருக்கும் போது தங்கத்தின் அழகினை ரசிப்பதே இல்லை,
அதன் தரத்தை தான் ஆராய்ந்து இருக்கிறேன்,
தங்க நகை கடன் தருவதற்கு.
வாழ்க்கை இன்னும் அழகாக, நமக்காக
வேலை ஓய்வுக்கு பின்னரே.
செப்டம்பர் 30,
மறக்க முடியாதே.
என் தலையில் இருந்த
மேலாளர் என்ற கிரீடம்
இறக்கிய நாள் ஆச்சே.
ஆமாம் மற்றவர்களின் பார்வைக்கு
அது வைரமாக தெரிந்தாலும்,
சுமந்தவன் எனக்கு தான் தெரியும்,
அது முள் கிரீடம் என்று.
.
No comments:
Post a Comment